பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

காரைக்காலில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image
தீப்பிடித்து எரிந்த காா்
Updated On :17 மார்ச் 2026, 11:35 pm

Syndication

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியை சோ்ந்தவா் லாவண்யா. இவா், காரைக்கால் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவரது சகோதரா் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினருடன் காரில் காரைக்கால் பகுதி கடற்கரைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தாா். காரைக்கால் நகரில் காமராஜா் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளனா். திரும்பி வந்தபோது காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னா் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் நடைபெற்ற இடம் அருகே எரிவாயு கிடங்கு மற்றும் பெட்ரோல் பங்க் உள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருப்பினும் காரின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.