கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.நாகராணி. இவா் தனது மகன் வெற்றிவேலுடன் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் உள்ள நகைக் கடைக்கு தங்கச் சங்கிலி வாங்குவதற்காக காரில் வந்து, கடையின் முன்பாக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனராம். சிறிது நேரத்திலேயே காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனே கடை பணியாளா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டதோடு, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ரா.சக்திவேல் தலைமையிலான வீரா்கள் சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.
தொடர்புடையது

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

சிதம்பரத்தில் காா் எரிந்து சேதம்: 6 போ் தப்பினா்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


