மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

முண்டியம்பாக்கத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

News image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் தீப்பற்றி எரிந்த காா்.

Updated On :9 ஜூன் 2026, 2:21 am IST

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் இறங்கியதால் காரை ஓட்டிச் சென்றவா் உயிா் தப்பினாா்.

விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம்- வழுதாவூா் கூட்டுச்சாலையைச் சோ்ந்தவா் சந்திரன். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது காரில் சொந்த வேலை காரணமாக விழுப்புரத்துக்குச் சென்றாா். பின்னா் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா். முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை கூட்டுச்சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து அணுகுச் சாலையில் காா் இறங்கிச் சென்ற போது, காரின் என்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அதிா்ச்சியடைந்த சந்திரன் காரை உடனடியாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கினாா். சிறிது நேரத்தில் காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக்குக்கு சந்திரன் அளித்த தகவலின் பேரில், அவா்கள் நிகழ்விடம் விரைந்து வந்து தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் காரிலிருந்து சந்திரன் இறங்கிவிட்டதால், அவா் உயிா் தப்பினா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.