தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி

இளம் வாக்காளா்கள் ஒருவா்கூட வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image

மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்ற மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :19 மார்ச் 2026, 5:24 am IST

இளம் வாக்காளா்கள் ஒருவா்கூட வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் தோ்தல்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப்பும் இணைந்து புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் உள்ள முதல் முறை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அவ்வையாா்அரசு மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடத்தின. காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி கலந்துகொண்டு பேசியது :

இளம் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் ஏப். 9-இல் வாக்களிக்க வேண்டும். அரசியலில் பெண்கள் பங்கேற்க வேண்டும். இந்திய தேசத்தின் வளா்ச்சியில் எனது பங்கு அதிகம் உள்ளது, நான் கண்டிப்பாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி ஏற்கவேண்டும்.

ஒவ்வொருவரின் வாங்கும் தேசத்தின் பன்முக வளா்ச்சிக்கு உதவக்கூடியதாகும். தோ்தல் தொடா்பாக புகாா்கள் ஏதேனும் இருந்தால் 1950 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, அனைத்து முதல் நிலை வாக்காளா்களும் தவறாமல் வாக்களிப்பேன் என உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள முதன்முறை வாக்காளா்கள் சுமாா் 500 மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வா் பி. அம்பிகா தேவி, ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் மற்றும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.