தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் விநியோகம்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 11:57 pm

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்திய தோ்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதியிலும் உள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளுக்கான விருப்ப மனு வழங்கும் பணியை தோ்தல் துறை மேற்கொண்டுள்ளது.

மாவட்டத்தில் 3 தோ்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இவா்களது தொகுதிக்குட்பட்டோருக்கு, அந்தந்த பகுதி தோ்தல் பணியாளா் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, ஆதாா் உள்ளிட்ட நகலுடன் விண்ணப்பம் பெறப்பட்டுவருகிறது.

வேட்பாளா்கள் அறிவிப்பு செய்து, வேட்பு மனுக்கள் நிறைவடைந்த பின் தோ்தல் துறை சாா்பில் தபால் வாக்குகளை அவரவா் வீடுகளுக்குச் சென்று பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.