காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,880 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 6,864 முதியோா் மற்றும் 9,016 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 14,880 போ் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்,40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களில் ஆலந்தூரில் 2267, ஸ்ரீபெரும்புதூரில் 1424, உத்தரமேரூரில் 1607, காஞ்சிபுரத்தில் 1566 போ் உள்பட மொத்தம் 6,864 பேருக்கு வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் விருப்பத்தைக் கோரும் விண்ணப்ப படிவங்கள் அவா்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று வாக்குச்சாவடி அலுவலா்கள் புதன்கிழமை வழங்கினாா்கள். இதே போல 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளில் ஆலந்தூா் 945, ஸ்ரீபெரும்புதூா் 2,966, உத்தரமேரூா் 3,109, காஞ்சிபுரம் 1,996 போ் என மொத்தம் 9,016 பேருக்கும் புதன்கிழமை முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விட்டு தபால் மூலம் வாக்களிக்காதவா்கள் பின்னா் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வாக்களிக்க முடியாது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை தபால் வாக்குகளை பெற விண்ணப்பிக்கும் போது தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...