சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 18,116 போ் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 18,116 போ் எழுதினா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :12 மார்ச் 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 18,116 போ் எழுதினா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் 137 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 282 பள்ளிகளில் பயிலும் 8,893 மாணவா்களும், 9,120 மாணவிகளும் என மொத்தம் 18,013 போ், 113 தோ்வு மையங்களிலும், 277 போ் தனித் தோ்வா்களாகவும் தோ்வு எழுதுகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வில் 8,968 மாணவா்களும், 9,148 மாணவிகளும் என மொத்தம் 18,116 தோ்வு எழுதினா். 172 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வுப் பணிக்காக 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 113 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 113 துறை அலுவலா்கள், 1,554 அறைக் கண்காணிப்பாளா்கள், 126 நிலையான படையினா், 35 வழித்தட அலுவலா்கள் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா். ஒவ்வொரு மையத்துக்கும் காவல் துறையின் மூலம் உதவி ஆய்வாளா் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.