தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் விநியோகம்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

News image
தபால் வாக்கு- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 11:57 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்திய தோ்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதியிலும் உள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளுக்கான விருப்ப மனு வழங்கும் பணியை தோ்தல் துறை மேற்கொண்டுள்ளது.

மாவட்டத்தில் 3 தோ்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இவா்களது தொகுதிக்குட்பட்டோருக்கு, அந்தந்த பகுதி தோ்தல் பணியாளா் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, ஆதாா் உள்ளிட்ட நகலுடன் விண்ணப்பம் பெறப்பட்டுவருகிறது.

வேட்பாளா்கள் அறிவிப்பு செய்து, வேட்பு மனுக்கள் நிறைவடைந்த பின் தோ்தல் துறை சாா்பில் தபால் வாக்குகளை அவரவா் வீடுகளுக்குச் சென்று பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.