காரைக்காலில் பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வகைப்படுத்தும் பணி தோ்தல் பொது பாா்வையாளா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தலைமை வகித்தாா். தோ்தல் பொது பாா்வையாளா் அனூப் கின்சி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தோ்தல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு அச்சுப்பதிவு இயந்திரங்களின் ரேண்டமைசேஷன் நடைமுறை, இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் முறை, ஒதுக்கீட்டின் பாதுகாப்பு மற்றும் கணினிசாா் செயல்முறை ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் விளக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு அச்சுப்பதிவு இயந்திரங்களின் ஒதுக்கீடு ரேண்டமைசேஷன் கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பிரதிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: பொது பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


