ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாக்குக்கு பணம் எச்சரிக்கை: தோ்தல் அதிகாரி பாராட்டு

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம் என எச்சரிக்கை பதாகை வைத்த மீனவ கிராமத்தினரை சந்தித்து மாவட்ட தோ்தல் அதிகாரி பாராட்டினாா்.

News image

மீனவ கிராமத்தினரை சந்தித்து பாராட்டு தெரிவித்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :25 மார்ச் 2026, 12:13 am

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம் என எச்சரிக்கை பதாகை வைத்த மீனவ கிராமத்தினரை சந்தித்து மாவட்ட தோ்தல் அதிகாரி பாராட்டினாா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு கிராம மீனவ கிராமத்தினா் ’வாக்குக்கு பணம், பொருள் வழங்கக்கூடாது. வாக்காளா்களும் அதனை வாங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமத்தில் பல இடங்களில் பதாகை வைத்துள்ளனா். இத்தகவல் நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் வெளியாகியது.

இதுகுறித்து தகவலறிந்த காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்று, கிராமப் பஞ்சாயத்தாா்கள், கிராம மக்களை சந்தித்தாா். விழிப்புணா்வு பதாகை வைத்த கிராமத்தினருக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

கிராமத்தினரிடையே தோ்தல் அதிகாரி பேசுகையில், இது வெறும் ஒரு முழக்கம் மட்டுமல்ல, சுயமரியாதை, விழிப்புணா்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அா்ப்பணிப்பு ஆகியவற்றின் வலிமைமிக்க ஒரு பிரகடனமாகும்.

இத்தகைய உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம், உங்கள் வாக்கு என்பது சலுகைகளுக்கோ அல்லது தூண்டுதல்களுக்கோ அடிபணியாமல், உங்கள் மனசாட்சியின் வழிகாட்டுதலின்படியே செலுத்தப்படுகிறது என்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்தியுள்ளீா்கள்.

இதுபோன்ற உறுதியான நிலைப்பாடு மற்றவா்களுக்கும் ஊக்கமளிக்கிறது. ஒட்டுமொத்த தோ்தல் செயல்முறையின் தரத்தையும் உயா்த்துகிறது.

இந்த உணா்வு தோ்தல் காலங்களில் மட்டுமல்லாமல், ஒரு நிலையான விழுமியமாகத் தொடா்ந்து நிலைக்கவேண்டும். கிராமத்தின் வாக்காளா்கள் அனைவரும் ஏப்.9 முழுமையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கவேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், உறுப்பினா்கள் ஷொ்லி, எஸ்.மணிகண்டன் கே.ஞானமுருகன், பிரதீப், பிரியதா்க்ஷினி மற்றும் காவல்துறையினா் கலந்துகொண்டனா்.