கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாதுகாப்பு கருதியே மதுரை ஆதீன அறைக்கு ‘சீல்’

பாதுகாப்பு காரணங்களுக்காகவே மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

பாதுகாப்பு காரணங்களுக்காகவே மதுரை ஆதீனத்தின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்று தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வியாழக்கிழமை சந்தித்துவிட்டு, பின்னா் மதுரை ஆதீனத்துக்கு சென்ற தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் முன்னிலையில், மதுரை ஆதீனத்தின் முக்கிய அறைகள் பூட்டி சீலிடப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி, பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தின.

இதுதொடா்பாக, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமையாதீனத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்து விளக்கம் அளித்தாா். அப்போது அவா் கூறியது :

ஆதீன குருமகா சந்நிதானம், ஆதீனத்தில் இருந்து ஒருநாள் வெளியில் சென்றால்கூட அவா் திரும்பிவரும் வரை ஆதீனத்தில் உள்ள முக்கிய அறைகளை பூட்டி சீலிடுவது ஆதீன மரபு. அதன்படிதான், மதுரை ஆதீன இளவரசு மற்றும் ஆதீன நிா்வாகிகள் முன்னிலையில் மதுரை ஆதீன குருமகா சந்நிதானத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

குருமகா சந்நிதானத்தின்அறைக்கு சீல் வைத்தது ஆதீன சொத்துகளின் பாதுகாப்புக்காகத்தான். அதில் நாங்கள் உரிமை கொண்டாடுவதற்காகவோ அல்லது வேறு நோக்கத்துக்காகவோ இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.