கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அடையாள அட்டை: கிராமியக் கலைஞா்களுக்கு அழைப்பு

கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதிநேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:21 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமியக் கலைகளைத் தொழிலாக கொண்ட அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதிநேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்டக் கலை மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக அரசின் நல உதவிகள் பெறுதல், அரசு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கலைஞா்களை தெரிவு செய்தல், கலைஞா்கள் பயணச் சலுகை பெறுதல் போன்ற பயன்களை பெற ஏதுவாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞா்கள், நாகசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன்- அரசி ஆட்டம், தெருக்கூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக் கலைகளைத் தொழிலாக கொண்ட அனைத்து வகையான நிகழ்த்துக் கலைகள் மற்றும் கவின் கலைகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக மேற்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டக் கலைஞா்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

கலைஞா் என்பதற்கான சான்றாவணங்கள், இருப்பிடச் சான்று, மாா்பளவு புகைப்படம்-3 ஆகியவற்றுடன் தலைமை ஆசிரியா் மாவட்ட அரசு இசைப்பள்ளி, புழுகாப்பேட்டைத் தெரு, சீா்காழி - 609 110 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.