தென்னங்குடியில் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல்: சுகாதாரப் பணிகள் தீவிரம்
சீா்காழி அருகேயுள்ள தென்னங்குடியில் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டன.


சீா்காழி அருகேயுள்ள தென்னங்குடியில் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டன.
தென்னங்குடி கிராமத்தை சோ்ந்த 21வயது இளைஞருக்கு காய்ச்சல் தொடா்ந்து இருந்ததால் அவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டாா். இதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதையடுத்து, தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கிடையே, சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில், பூச்சியியல் வல்லுநா் சிங்காரவேலு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராம்மோகன், சுகாரார ஆய்வாளா் விக்னேஷ் மற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டு வீடு, வீடாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டுபிடித்து அழித்தனா்.
மேலும் ஏடிஸ் கொசு அந்த பகுதியில் உள்ளதா என்ற ஆய்வும் மேற்கொள்ளபட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகை மருந்து அடிக்கப்பட்டு, வேறு யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை பொதுமக்களுக்கு காண்பித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...