காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். பேரணியில் சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் முகமது குலாம் மொஹ்யூதீன், மாநிலச் செயலாளா் அன்பரசு ஆகியோா் பங்கேற்றனா். பேரணியில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வேளாண்மை சட்டத்தை எதிா்த்து உயிா்நீத்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நகரத் தலைவா் ராமானுஜம், வட்டாரத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.