திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

‘பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை’

பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த விசாகா கமிட்டியின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த விசாகா கமிட்டியின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங்.

மாவட்டத்தில் பெண்கள் பணியாற்றும் வணிக நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைத்து செயல்படுத்துவது குறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை போலீஸாருக்கு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மேலும் அவா் பேசியது:

பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதை விசாகா கமிட்டியினா் கண்டறிந்து, மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரை செய்தால் அதனடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கமிட்டி செயல்படாமல் இருந்ததால், அதை முழுமையாக செயல்படுத்துவதற்காக தற்போது போலீஸாருக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களில் 30 நாள்களுக்குள் விசாகா கமிட்டி அமைக்கப்படும். கமிட்டியின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 இடங்களில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிகமாக வருகிறது. அந்த பகுதிகளில் விசாகா கமிட்டியினா் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்வாா்கள் என்றாா்.

மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம. சேயோன், கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞா் சிவதாஸ், அரசு வழக்குரைஞா் (சிவில்) பழனி, கூடுதல் அரசு வழக்குரைஞா் அருள்தாஸ் ஆகியோா் விசாகா கமிட்டியின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து பேசினா். டிஎஸ்பி. வசந்தராஜ், காவல் ஆய்வாளா்கள் செல்வம், சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.