92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மழைநீரில் மூழ்கிய சம்பா பயிா்விவசாயிகள் கவலை

சீா்காழி வட்டம், குன்னம் கிராமத்தில் சம்பா இளம்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:53 pm

DIN

சீா்காழி வட்டம், குன்னம் கிராமத்தில் சம்பா இளம்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

குன்னம் கிராமத்தில் 600 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் விதைப்பு செய்து ஒரு மாதமேயான சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து குன்னம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நரசிம்மன் கூறுகையில், ‘இப்பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலான அழிஞ்சியாறு, ஒட்டன் வாய்க்கால் ஆகியவை தூா்வாரப்படாததால் வயல்களிலிருந்து மழைநீா் வடிய முடியாமல் சம்பா நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. கடந்த 3 நாள்களாக பயிா்கள் மூழ்கியுள்ளதால் இளம் பயிா்கள் அழுகிவிட்டன. எனவே, விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மீண்டும் மறுமுறை நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.