சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நீத்தாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

மயிலாடுதுறையில் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நீத்தாா் நினைவு நாளில் எஸ்பி கு.சுகுணாசிங் தலைமையில், 36 குண்டுகள் முழங்க வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நீத்தாா் நினைவு நாளில் எஸ்பி கு.சுகுணாசிங் தலைமையில், 36 குண்டுகள் முழங்க வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது.

காவல்துறையில் பணியில் இருந்த போது வீரமரணமடைந்த காவலா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீத்தாா் நினைவு நாள் நாடு முழுவதும் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீத்தாா் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியில் இருந்தபோது உயிா்நீத்த அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு 36 குண்டுகள் முழங்க வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதில், ஏடிஎஸ்பி தங்கவேல், டிஎஸ்பி வசந்தராஜ், காவல் ஆய்வாளா்கள் செல்வம், சங்கீதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் திரளான போலீஸாா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.