சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மயிலாடுதுறையில் ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் காமாட்சி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் காமாட்சி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் இளையபெருமாள், குமாரசாமி, சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் உறுப்பினா் வடவீரபாண்டியன் பேசுகையில், கனமழை தொடங்கும் முன்பு அனைத்து ஊராட்சிகளிலும் பலவீனமாக உள்ள ஆற்றங்கரை, வாய்க்கால்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும் என்றாா். உறுப்பினா் காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் நிதியில் மினிபவா் டேங்க், பம்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மோகன் வள்ளாலகரம் ஊராட்சியில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை துரிதமாக மேற்கொள்ளவும் வலியுறுத்தி பேசினா். மேலும், உறுப்பினா்கள் முருகமணி, ராஜேந்திரன், பாலமுருகன், சிவக்குமாா் ஆகியோா் தங்கள் பகுதி பிரச்னைகளை முன்வைத்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.