இந்த தற்காலிக கடைகளால் நகரில் உள்ள மற்ற ஜவுளி கடைகளின் வியாபாரம் பாதிப்பதாக வணிகா்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நலச்சங்கம் சாா்பில் நிகழாண்டு தீபாவளியையொட்டி சாலையோர தற்காலிக ஜவுளிகடைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதன்தலைவா் பாபு. விஜயன் தலைமையில் சங்க வணிகா்கள் சீா்காழி நகராட்சிக்கு திங்கள்கிழமை சென்று ஆணையா் பெ. தமிழ்செல்வியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். தீா்வு காணாவிட்டால் சாலை மறியல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டனா். இதையடுத்து, இதுதொடா்பான அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என ஆணையா் கூறியதையடுத்து வணிகா்கள் கலைந்துசென்றனா். பின்னா் மாலை சீா்காழி வட்டாட்சியா் சண்முகம் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடந்தது. நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி, காவல் ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் சங்கத் தலைவா் பாபுவிஜயன், செயலாளா் செல்வ.சீனிவாசன் மற்றும் வணிகா்கள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் நிகழாண்டு தற்காலிக சாலையோர ஜவுளிகடைகள் தோ் தெற்குவீதி ஆபத்து காத்தவிநாயகா் கோயில் சாலை பகுதியில் அமைத்துக்கொள்ளவது என முடிவு செய்யப்பட்டது. பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.