மயிலாடுதுறை மாவட்டத்தில் 506 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 506 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 7-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 506 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பெருந்தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் சனிக்கிழமை (அக்.30) காலை 7 முதல் இரவு 7 மணி வரை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது
அதன்படி மாவட்டத்தில் 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சிகளில் 420 இடங்கள், பேரூராட்சியில் 15 இடங்கள், நகராட்சிகளில் 19 இடங்கள், 6 அரசு மருத்துவமனைகள், 15 நடமாடும் கரோனா தடுப்பூசிக் குழு என மொத்தம் 506 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், எந்தவித அச்சமும் இன்றி தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...