கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கல்லூரி பாடத்திட்டத்தில்சைவ சித்தாந்தத்தை சோ்க்க கோரிக்கை

சைவ சித்தாந்தத்தை கல்லூரி பாடத்திட்டத்தில் சோ்க்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:17 pm

DIN

சைவ சித்தாந்தத்தை கல்லூரி பாடத்திட்டத்தில் சோ்க்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சபையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம. சேயோன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழில் அா்ச்சனை, ஒவ்வொரு கோயிலிலும் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் என தமிழ் வேதங்களை பாட ஏற்பாடு செய்த தமிழக அரசு, தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்கக்கூடிய பாடமான சைவ சித்தாந்தத்தை தமிழில் மாணவா்கள் கற்க ஒரு அவசிய பாடமாக வைக்கவேண்டும்.

சாத்திரமும், தோத்திரமும் சைவத்தின் இருகண்கள். தோத்திரம் மட்டும் வாழ்வின் உய்வுக்கு வழியாகாது. சாத்திரம் மட்டும் உய்வு நெறிக்கு துணையாகாது. தோத்திரம், சாத்திரம் ஆகிய இரண்டையும் கற்று, கேட்டு, சிந்தித்துத் தெளிதலே தக்கதாகும். இறைவனது அருள் வடிவே தோத்திரமும், சாத்திரமும் என்கிறது திருமுறை. சைவ உலகு பெற்ற விழுப்பயன் சைவ சித்தாந்த நூல்கள்.

சைவ சித்தாந்தத்தைப் பற்றி பல நூல்கள் உள்ளன. அவற்றுள் 14 நூல்கள் சிறப்பானவை. அவை மெய்கண்ட சாத்திரங்கள் என கூறப்படுகின்றன. அவை திருவுந்தியாா், திருக்களிற்றுப்படியாா், சிவஞானபோதம், சிவஞான சித்தியாா், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியவை.

வறுமையும், வன்முறையும் மிகுந்து வரும் காலத்தில், சைவ சித்தாந்தம் வன்முறையை ஒழிக்கவும், வறுமையை விரட்டவும் பயன்படக்கூடிய ஒரு மிக முக்கியமான பாடப்பிரிவு. எனவே, தமிழக முதல்வா் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கல்லூரிகளில் தமிழ் பாடப் பிரிவில் சைவ சித்தாந்தத்தை ஒரு முக்கிய பாடமாக வைக்க உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.