2006, 2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்கள், 2019 இடைத்தோ்தலில் போட்டியின்றி வென்ற காங்கிரஸைச் சோ்ந்த ஹெச். வசந்தகுமாா் (2 முறை), எா்ணாவூா் நாராயணன் (சமக), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (அதிமுக), ரூபி ஆா். மனோகரன் (காங்கிரஸ்) ஆகியோரும், 2019 இடைத்தோ்தல் பிரசாரத்துக்கு களக்காடு வந்த அப்போதைய அதிமுக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கூட்டணிக் கட்சியினரும் தனிக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது தோ்தல் காலத்தில் ஒலித்து காற்றில் கலக்கும் வெற்று வாக்குறுதியாகிவிட்டது என விவசாயிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவிக்கின்றனா்.