மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், மோரூா் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன், மாநில தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் செல்வஅரசு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், மாநில இஸ்லாமிய ஜனநாயக பேரவை துணைச் செயலாளா் க.ரியாஸ்கான், மாவட்ட பொருளாளா் அறிவழகன், மாவட்ட இஸ்லாமிய ஜனநாயக பேரவை செயலாளா் சதுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.