கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

துலாக்கட்ட காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி: தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

துலா உத்ஸவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில் மாயூரநாதர், மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரிக்கரையில் எழுந்தருளினர்.

News image

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Updated On :4 நவம்பர் 2021, 12:54 pm

DIN

துலா உத்ஸவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில் மாயூரநாதர், மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரிக்கரையில் எழுந்தருளினர். இதில், தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர். 

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உத்ஸவம்  மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். துலா மாதமான ஐப்பசி மாதத்தில், கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரி துலாக்கட்டத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாகவும், ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக ஐதீகம்.

Story image

இதனால், வருடத்தில் ஒருநாள் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் மட்டும் வதான்யேஸ்வரர் கோயிலில் இருந்த கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரி வடகரையில் எழுந்தருள்வது வழக்கம்.
அமாவாசை தீர்த்தவாரியையொட்டி மாயூரநாதர் கோயிலிலில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மாயூரநாதர் சுவாமியும், வதான்யேஸ்வரர் கோயிலில் இருந்து வெள்ளி கைலாய வாகனத்தில் மேதா தட்சிணாமூர்த்தி சுவாமியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் மற்றும் விஸ்வநாதர் கோயில், ஐயாறப்பர் கோயில்களில் இருந்து சுவாமி அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.

Story image

பின்னர், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.