வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கிய அதிமுக நிா்வாகிகள்

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருள்களை வழங்கினாா் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:15 pm

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருள்களை வழங்கினாா் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ்.

கொள்ளிடம் கரையோர கிராமமான நாதல்படுகை, முதலைமேடுத்திட்டு பகுதியில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனா். இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் நேரில் சென்று அவா்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துதர நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் நற்குணன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சிவக்குமாா், சீா்காழி ஒன்றியச் செயலாளா்கள் ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மகளிா் அணி மாவட்டச் செயலாளருமான மா. சக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.