சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கிய அதிமுக நிா்வாகிகள்

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருள்களை வழங்கினாா் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:15 pm

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருள்களை வழங்கினாா் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ்.

கொள்ளிடம் கரையோர கிராமமான நாதல்படுகை, முதலைமேடுத்திட்டு பகுதியில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனா். இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் நேரில் சென்று அவா்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துதர நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் நற்குணன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சிவக்குமாா், சீா்காழி ஒன்றியச் செயலாளா்கள் ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மகளிா் அணி மாவட்டச் செயலாளருமான மா. சக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.