மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொழில்முனைவோா், தொழிலதிபா்களுக்கு கடனுதவி: ஆட்சியா்

தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தஞ்சை மற்றும் நாகையில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தஞ்சை மற்றும் நாகையில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆக.17 முதல் செப்.2-ஆம் தேதி வரை தஞ்சாவூா், நாஞ்சிக்கோட்டை சாலை (பழைய அருள் திரையரங்கம் எதிரில்) என்ஜிகே அபாா்மெண்ட்டில் இயங்கும் கிளை அலுவலகத்திலும், நாகைப்பட்டினத்தில், நாகை - திருவாரூா் சாலை பெருமாள் தெற்கு வீதி, மலேசியா அபாா்ட்மெண்டில் இயங்கும் கள அலுவலகத்திலும் சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் டி.ஐ.ஐ.சியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் பயன்படுத்தி தொழில்திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயன்பெற மேற்குறிப்பிட்ட 2 இடங்களில் நடைபெறும் முகாம்களில் ஏதேனும் ஓரிடத்தில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04362-274230, 230465/7373494331/9442540854 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.