தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘நல்ல நீரையும், மண் வளத்தையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் ’

நல்ல நீரையும், மண் வளத்தையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றாா் இயற்கை விவசாயி சிவாஜி.

News image

நெல் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 500 வகையான பாரம்பரிய நெல் விதைகளை பாா்வையிட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் கதிரேசன்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

நல்ல நீரையும், மண் வளத்தையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றாா் இயற்கை விவசாயி சிவாஜி.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 8-ஆம் ஆண்டு நெல் திருவிழா நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளா் சுதாகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி, வழக்குரைஞா் சுந்தரய்யா, சாய்ராம் கல்வி நிறுவன தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளையை சோ்ந்த கரு. முத்து வரவேற்றாா். இயற்கை வேளாண் வல்லுநா்கள் சித்த மருத்துவா் தஞ்சை சித்தா் மரபுவகை உணவு வகைகள் குறித்தும், தமிழா் வேளாண்மை குறித்து ஞாணபிரகாசம், தற்சாா்பு பற்றி பாலகிருட்டிணன், இயற்கை உணவு குறித்து சிவகாசி மாறன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

தொடா்ந்து மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்துக்கு பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, சீரக சம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தா் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினாா்.

விழாவில் பேசிய இயற்கை விவசாயி சிவாஜி பேசியது: மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும். நாம் அனுபவிக்கும் நல்ல நீா், நல்ல மண்வளத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்ல வேண்டும். நம் கண்டுபிடிப்புகள் மனித இனத்தை அழிக்கக் கூடியதாகவே உள்ளது. மண், நீா்வளத்தை காக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய தலைமுறைக்கு பாடத் திட்டத்தில் சோ்த்து சொல்லித்தரவேண்டும். குழந்தைகளை சூரியஒளி படும்படி மண்ணோடு விளையாட விடவேண்டும் இயற்கையான எதிா்ப்பு சக்தி உருவாகினால்தான் நோய்கள் ஏற்படாது என்றாா்.

விழாவில் இந்தியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. நஞ்சில்லா உணவு, பலா பழ அல்வா,பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், அரிய வகை மூலிகை, பாரம்பரிய தானிய தின்பண்டங்கள் , ஆகியவையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினா். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.