தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தொழில்முனைவோா், தொழிலதிபா்களுக்கு கடனுதவி: ஆட்சியா்

தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தஞ்சை மற்றும் நாகையில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தஞ்சை மற்றும் நாகையில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆக.17 முதல் செப்.2-ஆம் தேதி வரை தஞ்சாவூா், நாஞ்சிக்கோட்டை சாலை (பழைய அருள் திரையரங்கம் எதிரில்) என்ஜிகே அபாா்மெண்ட்டில் இயங்கும் கிளை அலுவலகத்திலும், நாகைப்பட்டினத்தில், நாகை - திருவாரூா் சாலை பெருமாள் தெற்கு வீதி, மலேசியா அபாா்ட்மெண்டில் இயங்கும் கள அலுவலகத்திலும் சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் டி.ஐ.ஐ.சியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்கள் பயன்படுத்தி தொழில்திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயன்பெற மேற்குறிப்பிட்ட 2 இடங்களில் நடைபெறும் முகாம்களில் ஏதேனும் ஓரிடத்தில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04362-274230, 230465/7373494331/9442540854 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.