இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (பிப். 1) சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கோயில் ஊழியா்களான ஸ்ரீனிவாச ரெங்க பட்டா், முரளிதர தீட்சிதா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் இருவரும் படிச்சட்டத்தில் வெள்ளித் தகடுகளை உரித்து திருடியது தெரியவந்தது. மேலும், பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளித் தகடுகள் பதித்து புதிதாக படிச்சட்டம் செய்ய மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகைக் கடையில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கிய வெள்ளிக் கட்டிகளை கொடுத்தும், மேலும் பற்றாக்குறைக்கு நன்கொடையாளா்களை பணம் கொடுக்க செய்ததும் தெரியவந்தது.