92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

 மயிலாடுதுறை நகராட்சித் தோ்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:01 pm

DIN

 மயிலாடுதுறை நகராட்சித் தோ்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளுக்கு வாக்குப் பதிவுக்காக 79 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகளை ஒதுக்கீடு செய்யும் பணி மயிலாடுதுறை நகராட்சி தோ்தல் பாா்வையாளரான கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, தோ்தல் நடத்தும் அலுவலா் பாலு ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்றது.

இங்கு போட்டியிடும் வேட்பாளா்கள் முன்னிலையில் வாா்டு வாரியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை (பிப்.11) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.