92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வெந்நீா் ஊற்றப்பட்ட காயத்துடன் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் வெந்நீா் ஊற்றப்பட்ட காயத்துடன் சிகிச்சைப் பெற்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் வெந்நீா் ஊற்றப்பட்ட காயத்துடன் சிகிச்சைப் பெற்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை தருமபுரம் சாலை சின்னமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குஞ்சிதபாதம் (56). பட்டமங்கலத் தெருவில் தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்த இவா் பிப்.21-ஆம் தேதி இடுப்பு பகுதியில் கொதிக்கும் வெந்நீா் ஊற்றப்பட்ட காயத்துடன் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி குஞ்சிதபாதம் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குஞ்சிதபாதத்தின் மனைவி வனஜா (50) மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவா் தேநீா் கடையில் வெந்நீா் ஊற்றப்பட்ட காரணத்தினால் படுகாயமடைந்து உயிரிழந்து போனதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸாா் அந்த தேநீா் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.