முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

கனமழையால் பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி பாதிப்பு 

சீர்காழி பகுதியில் பெய்த கனமழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வருக்கு

பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி.

Published On :1 பிப்ரவரி 2024, 1:30 pm IST

சீர்காழி பகுதியில் பெய்த கனமழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கருவி, வேட்டங்குடி ,ஆச்சாள்புரம், எடமணல், திருக்கருகாவூர், பழையபாளையம், செம்மங்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள், மண்சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தயார் செய்யப்படும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு ஆகியவை விற்பனைக்காக வியாபாரிகள் மூலம் பல்வேறு பகுதிக்கு  விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களே உள்ள நிலையில் மண் பானை, அடுப்பு, சட்டிகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக களிமண்ணைப் பதப்படுத்தி பானைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்பாண்டத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பானை தயாரிக்கும் பக்குவ நிலைக்கு களிமண்ணை தயார் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு பானைகள் தயார் செய்யும் பணி தடைப்பட்டுள்ளது. 

Story image

இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தில் பானை தயாரிக்கும் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மாவட்ட மண்பாண்ட தயாரிப்பு சங்கத் தலைவர் மாரிமுத்து முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், மண்பாண்டத் தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. தொடர் மழையினால் இத்தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காரணமாக பொங்களுக்கு தயாராகும் மண்பாணைகளை சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூண்று மாத மழையினால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுளர். 

Story image

முதல்வர் மண்பாண்டத் தொழிலாளர்கள் நிலை அறிந்து மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தை, ரூ 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதே நிலையில் விடுபட்ட மண்பாண்டத் தொழிலாளர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். மேலும்  மண்பாண்டத் தொழில்கள் நலிந்து வருவதை தடுத்து மாவட்டந்தோறும் மண்பாண்டத் தொழிலை இளைஞர் கற்றுக்கொள்ள பயிற்சி கூடங்கள் அமைத்து பாரம்பரியம் மிக்க மண்பாண்டத் தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாரிமுத்து உதவியாக ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து அவரும் அவரது மகனும் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.