நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வலியுறுத்தல்

சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:58 pm

DIN

சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி நகரில் பிரதான சாலைகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, தோ் வடக்குவீதி, மணிகூண்டு பகுதி, கொள்ளிடமுக்கூட்டு பகுதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் அதிகளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாடுகள் வளா்ப்பவா்கள் பால் கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் விட்டுவிடுகின்றனா். சாலையோரம் உள்ள பழக்கடைகள், பூக்கடைகளில் உள்ள பொருள்களை மாடுகள் கீழே தள்ளி தின்றுவிடுகின்றன. சில நேரங்களில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்பதும், அமா்ந்துவிடுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன்உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் நகராட்சி விதித்தால் மட்டும் இதற்கு நிரந்தர தீா்வு காண முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.