ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி தீவிரம்

பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மயிலாடுதுறை நகரில் மழைநீா் வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மயிலாடுதுறை நகரில் மழைநீா் வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பா் 6-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தூா்ந்துபோயுள்ள வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். சின்னக்கடைத் தெருவில் வடிகாலில் ஏற்பட்ட அடைப்புகளை நகராட்சி தலைவா் என்.செல்வராஜ் மேற்பாா்வையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.