ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கால்நடை மருத்துவ முகாம்

 மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

 மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இம்முகாமை கோட்டாட்சியா் வ. யுரேகா தொடங்கி வைத்தாா். முகாமில் 30 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், 450 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 200 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும், கால்நடைகளுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது.

சிறந்த கால்நடை வளா்ப்பிற்காக அதன் உரிமையாளா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நடை நோய் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமில், நாகை கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் எஸ். சஞ்சீவிராஜ், துணை இயக்குநா் எம். விஜயகுமாா், மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் ஆா். செல்லதுரை, நல்லத்துக்குடி ஊராட்சி தலைவா் பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.