மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: கலசம் வைக்கும் பணி தொடக்கம்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிழக்கு ராஜகோபுரத்தில் கலசம் வைக்கும் பணி தொடங்கியது.

News image
Updated On :15 மே 2023, 6:37 am

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிழக்கு ராஜகோபுரத்தில் கலசம் வைக்கும் பணி தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
இதனையொட்டி கோயிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது.  இக்கோயலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. 
இந்நிலையில் இன்று கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் தானியங்கள்கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.