போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு:அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:57 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தற்போது பெய்துவரும் தொடா்மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மருந்துக்கடைகளை அணுகாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடித்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் தேவையில்லாத பொருள்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. அந்தவகையில், 5 நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் 10 பள்ளி சிறாா் மருத்துவ முகாம்கள் மூலமாகவும் பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சனிக்கிழமைதோறும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் காய்ச்சல் வந்தால் அச்சமடையாமல் உரிய சிகிச்சை பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.