சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய முன்னாள் கல்லூரி முதல்வா் த. அறவாழி, கல்லூரி முதல்வா் ப. பத்மினி.

Updated On :6 ஏப்ரல் 2024, 8:10 pm

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 39-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ப. பத்மினி தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவை தொடக்கி வைத்தாா். துறைத் தலைவா்கள் பட்டதாரி மாணவிகளை அறிமுகம் செய்தனா். கல்லூரியின் முன்னாள் முதல்வா் த. அறவாழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

பல்கலைக்கழக அளவில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். பேரவைப் பொறுப்பாசிரியரும், தமிழ் உயராய்வுத் துறைத் தலைவருமான இரா. இளவரசி நன்றி கூறினாா். விழாவில் 751 மாணவிகள் பட்டம் பெற்றனா்.