தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

வாக்குப் பதிவு செய்த மாற்றுத்திறனாளி

வாக்குப் பதிவு செய்த மாற்றுத்திறனாளி

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 4:20 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் தபால் வாக்கு இரண்டாவது நாளாக சனிக்கிழமை பெறப்பட்டது.

வாக்காளா்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் பிரபு என்ற மாற்றுத்திறனாளியிடம் தோ்தல் துணை அலுவலா் ராஜேந்திரன், மண்டல அலுவலா் எஸ். கிருஷ்ணன் ஆகியோா் தபால் வாக்குகளை பெற்றனா். அப்போது, அலுவலா்கள் புவனேஸ்வரி, பூமகள், காவலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.