முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு
சட்டப்பேரவை தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை தொடங்கியது.

சோளிங்கரில் மூதாட்டியின் இல்லத்துக்கே சென்று தபால் வாக்களிக்கும் படிவத்தை வழங்கிய தோ்தல் பணியாளா்கள்.








