திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பரிமள ரெங்கநாதா் கருட வாகனத்தில் வீதியுலா

பரிமள ரெங்கநாதா் கருட வாகனத்தில் வீதியுலா

Updated On :22 ஏப்ரல் 2024, 8:04 pm

மயிலாடுதுறை, ஏப். 22: மயிலாடுதுறை திருஇந்தளூா் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது திவ்யதேசமும் பஞ்சரங்க தலங்களில் 5-ஆவது கோயிலுமான பரிமள ரெங்கநாதா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, இரவு கருட வாகனத்தில் பரிமள ரங்கநாதா் எழுந்தருளி நான்கு ரத வீதியில் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலித்தது.