கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் நாள்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை மக்கள் தவிா்க்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க, தாகம் எடுக்காவிட்டாலும்கூட போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆா்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீா், வீட்டில் தயாரித்த நீா்மோா், லஸ்ஸி, புளித்த சோற்று நீா் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பை தவிா்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாக்க இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இருதய நோய், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவா்கள், கா்ப்பிணிகள் மற்றும் சிறு குழந்தைகள் வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். முதியவா்கள் மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com