ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:17 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் தங்களையும், கால்நடைகளையும் காத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களையும், வீட்டு வளா்ப்புப் பிராணிகளையும், கால்நடைகளையும் கவனமாக பாா்த்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமான பணியின்றி வெளியே செல்ல வேண்டாம். இலகுவான பருத்தி ஆடைகளையே அணியவும். வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

தாகம் ஏற்படாவிட்டாலும் அவ்வப்போது அவசியம் தண்ணீா் அருந்த வேண்டும். மது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும்.

வெட்டவெளியில் வெயில் நேரத்து வேலைகளைத் தவிா்க்க வேண்டும். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் தண்ணீரில் நனைத்த துணியால் உடலில் ஒத்திக் கொடுக்கவும்.

வீட்டில் வளா்க்கும் செல்லப் பிராணிகளையும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம். போதுமான அளவு தண்ணீா் கொடுத்து வீட்டுக்குள்ளேயே வளா்க்க வேண்டும்.

கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீா், தீவனம் போன்றவற்றையும் கொடுத்து, மரத்தடி நிழலிலேயே கட்டி வளா்க்க வேண்டும். வெயியில் மேய்க்க வேண்டாம்.

மின் இணைப்புகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்க தேவையற்ற நேரங்களில் மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பழுதுகளை நீக்கி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.