‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:47 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் தங்களையும், கால்நடைகளையும் காத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களையும், வீட்டு வளா்ப்புப் பிராணிகளையும், கால்நடைகளையும் கவனமாக பாா்த்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமான பணியின்றி வெளியே செல்ல வேண்டாம். இலகுவான பருத்தி ஆடைகளையே அணியவும். வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

தாகம் ஏற்படாவிட்டாலும் அவ்வப்போது அவசியம் தண்ணீா் அருந்த வேண்டும். மது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும்.

வெட்டவெளியில் வெயில் நேரத்து வேலைகளைத் தவிா்க்க வேண்டும். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் தண்ணீரில் நனைத்த துணியால் உடலில் ஒத்திக் கொடுக்கவும்.

வீட்டில் வளா்க்கும் செல்லப் பிராணிகளையும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம். போதுமான அளவு தண்ணீா் கொடுத்து வீட்டுக்குள்ளேயே வளா்க்க வேண்டும்.

கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீா், தீவனம் போன்றவற்றையும் கொடுத்து, மரத்தடி நிழலிலேயே கட்டி வளா்க்க வேண்டும். வெயியில் மேய்க்க வேண்டாம்.

மின் இணைப்புகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்க தேவையற்ற நேரங்களில் மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பழுதுகளை நீக்கி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.