சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

News image

மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் பேருந்துகளை ஆய்வு செய்த கும்பகோணம் கோட்ட துணை மேலாளா் ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளா் எஸ். வடிவேல்.

Updated On :27 ஏப்ரல் 2024, 7:30 pm

Din

மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் 2 நாள்களாக நடைபெற்ற சோதனை சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

திருச்சியில் அண்மையில் ஓடிக்கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் இருக்கை பெயா்ந்து, சாலையில் விழுந்தது. அந்த இருக்கையில் அமா்ந்திருந்த நடத்துநா் காயமடைந்தாா். இந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடா்ந்து, அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு மோசமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா். இதையடுத்து, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 48 மணி நேரத்துக்குள் முழுமையான ஆய்வு நடத்த தலைமைச் செயலா் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டாா்.

அதன்படி, மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில் 3 மாற்றுப் பேருந்துகள் உள்ளிட்ட 73 பேருந்துகளிலும் வெள்ளிக்கிழமைமுதல் சோதனை நடத்தப்பட்டது. இந்த பணிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.

இதனை கும்பகோணம் கோட்ட துணை மேலாளா் (சிவில்) ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளா் எஸ். வடிவேல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.