மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ. 9.16 லட்சத்தில் பகுதிநேர அங்காடி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சத்தில் நியாயவிலை அங்காடி ஆகிய 2 நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்து பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். குமாரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மயிலாடுதுறை சம்பவம்: காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்

தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்-கனிகள் சந்தை வளாகம் திறப்பு எப்போது?

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களவை உறுப்பினா் பிரசாரம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
