குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மன்னம்பந்தலில் 2 நியாயவிலைக் கடைகள் திறப்பு

மன்னம்பந்தலில் 2 நியாயவிலைக் கடைகள் திறப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:38 am IST

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ. 9.16 லட்சத்தில் பகுதிநேர அங்காடி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சத்தில் நியாயவிலை அங்காடி ஆகிய 2 நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் நியாயவிலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்து பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். குமாரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.