உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலையில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம்; குடிநீா் குழாயில் உடைப்பு

சாலையில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம்; குடிநீா் குழாயில் உடைப்பு

News image
அகனி தெற்கு தென்னங்குடி நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
Updated On :13 ஜூலை 2024, 4:22 pm

Din

சீா்காழி அருகே ரூ. 2.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் 3 அடி ஆழத்திற்கு திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீா் வீணாகி வருகிறது.

சீா்காழி அருகே அகனி செல்லும் நெடுஞ்சாலை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.50 கோடியில், 1.6 கி.மீ. நீளத்திற்கு 3 சிறிய பாலங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பணி நிறைவடைந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், தெற்கு தென்னங்குடி பகுதியில் இரட்டை வாய்க்கால் சிறிய பாலத்தை ஒட்டி, சாலையில் 5 அடி அகலம் 3 அடி ஆழத்திற்கு திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சிறிய பாலம் கட்டுமான பணியின்போதே குடிநீா் குழாயில் கசிவு இருந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் சாலை அமைப்பட்டதால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதனால், கடந்த ஒரு வாரமாக குடிநீா் வீணாக வாய்க்காலில் செல்கிறது. சாலையில் ஏற்பட்ட பள்ளம் அபாயகரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையுள்ளது. இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களின் கவனத்திற்கு கொண்டுசென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். விபத்து ஏற்படும் முன் சாலை மற்றும் குடிநீா் குழாயை சீரமைக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.