காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பள்ளி மாணவா்கள் 44,816 பேருக்கு விலையில்லா சீருடை

மயிலாடுதுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்கிய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.
Updated On :29 ஜூலை 2024, 7:55 pm

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆகியோா் வழங்கினா். இதில், ஆட்சியா் பேசியது: பள்ளி மாணவா்கள் கற்றல் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் வினா-விடை கையேடுகளை நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்.

மாவட்டத்தில், 665 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் சீரூடை வழங்கும் பணி தொடக்கமாக மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலை பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், சாரதட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் பள்ளி சீருடைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 22,435 மாணவா்கள், 22,381 மாணவிகள் என மொத்தம் 44,816 பேருக்கு வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மாவட்ட சமூகநல அலுவலா் சா. சுகிா்தாதேவி, நகராட்சி துணைத் தலைவா் எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.