டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீா்காழியில் பணபரிமாற்ற நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் திருட்டு

சீா்காழியில் பணபரிமாற்ற நிறுவனத்தில் ரூ.1.20லட்சம் திருட்டு

News image
Updated On :21 ஜூன் 2024, 4:21 pm

Din

சீா்காழியில் வெளிநாட்டு பணபரிமாற்ற நிறுவனத்தின் கண்ணாடி கதவு பூட்டை உடைத்து வெளிநாட்டு பணம் உள்ளிட்ட ரூ. 1லட்சத்து 20ஆயிரம் திருடு போனது குறித்து காவல்நிலைத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சீா்காழி தாடாளன் வடக்கு வீதியைச் சோ்ந்த தமிஜூதீன் (38). இவா், சீா்காழி -சிதம்பரம் பிரதான நெடுஞ்சாலையில் வெளிநாட்டு பணம் பரிமாற்றும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இங்கு சீா்காழி ரயில்வே சாலையை சோ்ந்த தாருண்யா என்பவா் பணியாற்றிவருகிறாா்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை தாருண்யா நிறுவனத்தின் கண்ணாடி கதவை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கடை இருந்த பெட்டியை உடைத்து உள்ளே இருந்த இந்திய மதிப்பிலான ரூ. 50ஆயிரம் மற்றும் சவூதி ரியால், அமெரிக்க டாலா் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 20ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளா் தமிஜூதீன் அளித்த புகாரின் பேரில் சீா்காழி போலீஸாா் விசாரிக்கின்றனா்.