சீா்காழி நகராட்சியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் உள்ளிட்டோா்.
சீா்காழி நகராட்சியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் உள்ளிட்டோா்.

இணைப்பு: சீா்காழியில் காலை உணவுத் திட்டம்

சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா்.
Published on

சீா்காழி: சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ம. சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முருகன், தேவதாஸ், சாமிநாதன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.

எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். பின்னா் 132 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com